தமிழக செய்திகள்

ரெயிலில் அடிபட்டு லாரி டிரைவர் பலி

வெண்ணந்தூர் அருகே ரெயிலில் அடிபட்டு லாரி டிரைவர் இறந்தார்.

தினத்தந்தி

வெண்ணந்தூர்

சேலம் ரெயில்வே எல்லைக்கு உட்பட்ட வெண்ணந்தூர் அருகே ஆயிப்பாளையம் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் நேற்று அதிகாலை ரெயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த சேலம் ரெயில்வே போலீசார் மற்றும் வெண்ணந்தூர் போலீசார் இறந்தவர் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். மேலும் போலீஸ் விசாரணையில் ரெயிலில் அடிபட்டு இறந்தவர், வெண்ணந்தூர் அருகே உள்ள தேங்கல்பாளையம் குடித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (வயது 40). லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் இவர் குடிபோதையில் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது