தமிழக செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்த லாரி.. தண்ணீரில் மிதக்கும் சிலிண்டர்கள்

லாரி கவிழ்ந்ததில், அதில் இருந்த சிலிண்டர்கள் ஏரியில் விழுந்து மிதந்தன.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது பனிமூட்டம் காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்கிருந்த ஏரிக்கரையோரம் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், லாரியில் இருந்த பல சிலிண்டர்கள் ஏரியில் விழுந்து மிதந்தன. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், ஏரியில் மிதந்த சிலிண்டர்களை அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?