தமிழக செய்திகள்

லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது

தக்கலை,

தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் திருவிதாங்கோடு பகுதியில் சென்றபோது சந்தேகப்படும் வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மணலிக்கரை பகுதியை சேர்ந்த அபுபக்கர்(வயது 46) என்பதும், அந்த பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 18 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.