தமிழக செய்திகள்

லாட்டரி சீட்டுகள் விற்றவர் சிறையில் அடைப்பு

லாட்டரி சீட்டுகள் விற்றவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினத்தந்தி

ஆலங்குடி அருகே செம்பட்டிவிடுதி பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகளை விற்ற வடவாளம் ஊராட்சி மேலக்காயம்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 2 செல்போன்கள், கேரள லாட்டரி சீட்டுகள், ரூ.740 ஆகியவற்றை பறிமுதல் செய்து செம்பட்டிவிடுதி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு