தமிழக செய்திகள்

கெங்கவல்லி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்...!

கெங்கவல்லி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

தினத்தந்தி

சேலம்:

சேலம் மாவட்டம் கடம்பூர் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் விஜய்(வயது23). இவர் நெல் அறுவடை எந்திரத்தில் டிரைவராக இருந்து வருகிறார்.

இதேபோன்று பைத்தூர் வள்ளி நகர் பகுதியை சேர்ந்த சாமி மகள் பிரியா(20). இவர் தனியார் கல்லூரில் 3 ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய்-பிரியா இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி ஆத்தூர் வட சென்னிமலை முருகன் கோவிலில் இன்று காலை 7 மணிக்கு திருமணம் செய்து கொண்டு கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் இருவீட்டாரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை