தமிழக செய்திகள்

காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

தினத்தந்தி

முசிறி:

முசிறி காமராஜ் காலனியை சேர்ந்த மனோகரனின் மகன் மோகன் பிரபு (23). இவர் திருச்செங்கோட்டில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த சின்னசாமியின் மகளும், கல்லூரி மாணவியுமான சந்தியாவும்(20) கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சந்தியா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று ஒரு கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் மோகன்பிரபுவும், சந்தியாவும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் முசிறி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் பேசியதில், இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து சந்தியாவை மோகன்பிரபு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்