தமிழக செய்திகள்

மதுரை ஜல்லிக்கட்டு: வாடிவாசல், மைதானம் தயார்படுத்தும் பணிகள் மும்முரம்

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளன.

தினத்தந்தி

மதுரை,

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளன. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பாலமேடு மஞ்சமலை ஆறு மைதான பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் மைதானம் சேதமடைந்த நிலையில் ஜே.சி.பி. இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்கள் உதவியுடன் சீர்ப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பார்வையாளர்களுக்கான கேலரி அமைக்கும் பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை