தமிழக செய்திகள்

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

சென்னையில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் நாளை மறுநாள் (11.9.2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ஐடி.காரிடார்: பிள்ளையார்கோயில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கையம்மன்கோயில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, தபால் அலுவலக தெரு, எம்.சி.என்.நகர் மற்றும் எக்ஸ்டென்ஷன், ஸ்ரீபுரம் சாலை ஆகிய இடங்களில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.