நாங்குநேரி:
நாங்குநேரியை அடுத்து இளந்தோப்பு அருகே தருவையைச் சேர்ந்த சுடலைமணி (வயது 21) என்பவர் அனுமதியின்றி டிராக்டரில் குளத்து மண் எடுத்து வந்தார். இதுதொடர்பாக நாங்குநேரி கிராம நிர்வாக அலுவலர் ராஜரத்தினம் அளித்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலைமணியை கைது செய்தனர்.