தமிழக செய்திகள்

ஆட்டோவில் பேட்டரி திருடியவர் கைது

ஆட்டோவில் பேட்டரி திருடியவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவர் உமர் (வயது 36). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவரது ஆட்டோவில் இருந்த பேட்டரியை மர்மநபர் திருடி சென்றார். இதுகுறித்து உமர் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இப்ராகிம் (35) என்பவர் பேட்டரி திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, இப்ராகிமை கைது செய்தனர்.