தமிழக செய்திகள்

திருப்பத்தூர் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டலாபிஷேக விழா

திருப்பத்தூர் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டலாபிஷேக விழா நடந்தது.

தினத்தந்தி

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில் மார்கழி 1-ந்தேதி அன்று கணபதி ஹோமத்துடன் லட்சார்ச்சனை விழா தொடங்கி தினமும் நடைபெற்று வந்தது. மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு சிவாச்சாரியார்கள் தலைமையில் கோவில் மைய மண்டபத்தில் ஹோமம் வளர்க்கப்பட்டு யாகவேள்வி நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு மூலவரான அய்யப்பனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், நெய், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 18 வகை அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வெள்ளி அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். .இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் உற்சவர் மின்னொளி ரதத்தில் இரவு 7 மணிக்கு திருவீதி உலா கோவிலிலிருந்து புறப்பட்டு நான்குரோடு, தேரோடும் வீதி, அஞ்சலகவீதி, பஸ்நிலையம் வழியாக கோவிலை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை அய்யப்ப சேவா சங்கத்தினரும், மகரஜோதி யாத்திரை குழுவினரும் செய்திருந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்