தமிழக செய்திகள்

மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.31½ லட்சம்

மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.31 லட்சத்து 66 ஆயிரத்து 363 மற்றும் 320 கிராம் பவுன், 450 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வரப்பெற்றது.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம். பக்தர்கள் சலுத்திய காணிக்கை எண்ணப்பட்டதில் காணிக்கையாக ரூ.31 லட்சத்து 66 ஆயிரத்து 363 மற்றும் 320 கிராம் பவுன், 450 கிராம் வெள்ளி செலுத்தப்பட்டிருந்தது. உண்டியல் திறப்பின் போது கோவில் பரம்பரை தர்மகர்த்தா மணலி சீனிவாசன், கோவில் துணை கமிஷனர் கவெனிதா மற்றும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். உண்டியலில் காணிக்கை என்னும் பணி நடந்தபோது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்