தமிழக செய்திகள்

செல்லியம்மன் கோவிலில் மாவிளக்கு வழிபாடு

செல்லியம்மன் கோவிலில் மாவிளக்கு வழிபாடு நடந்தது.

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் ஊரணி திருவிழாவை முன்னிட்டு பொங்கல் வைத்தல், மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி செல்லியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. நாட்டார்மங்கலம் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கோவில் வளாகத்தில் பொங்கல் மற்றும் மாவிளக்கு வைத்து வழிபட்டனர். முன்னதாக கரகம் தூக்கும் வழிபாடு, குடி அழைப்பு நிகழ்ச்சி, அய்யனார் கோவில் பூஜை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்