தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம்

தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் என்ற பெயரில் மத்திய அரசு வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவதாக கூறி மனிதநேய மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், விக்கிரவாண்டி, மதுரை கப்பலூர் உள்பட பல்வேறு சுங்கச்சாவடிகளில் வாகனங்களை மறித்து மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனிதநேய மக்கள் கட்சியினரை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு