தமிழக செய்திகள்

மாரியம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

மாரியம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினத்தந்தி

அரியலூர் எண்ணெய்கார தெருவில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், முருகன், சந்திரபகவான் உள்ளிட்ட சுவாமிகள் உள்ளன. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் புனிதநீரை கோவில் கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் அரியலூர் உழவர் சந்தை பின்புறம் அமைந்துள்ள விநாயகர், ஆனந்தாயி, ஆண்டத்தாயி, ஆகாசகருப்பு கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்