தமிழக செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேட்டை:

நெல்லை அருகே பேட்டை மல்லிமால் தெருவில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். புரட்சிகர இளைஞர் கழக மாநில தலைவர் சுந்தர்ராஜ் தொடக்க உரையாற்றினார். மாநில நிலைக்குழு உறுப்பினர் ரமேஷ், ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த கணேசன், அன்புச்செல்வி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்