தமிழக செய்திகள்

வியாபாரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் சிக்கினர்

தினத்தந்தி

ஓசூர்:

சூளகிரி அருகே உள்ள சென்னப்பள்ளியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 26). காய்கறி வியாபாரி. இவர் நேற்று முன்தினம் காலை சூளகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் சர்வீஸ் சாலையில் நின்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் கேட்டனர். இதுகுறித்து பிரவீன் அளித்த புகாரின்பேரில் கத்தியை காட்டி மிரட்டிய லாரி டிரைவர்களான மதுரை மாவட்டம் சக்கியமங்கலம் செந்தூரப்பாண்டி (29), திருவண்ணாமலை மாவட்டம் வெள்ளியம்பாக்கம் ராமகிருஷ்ணன் (43) ஆகிய 2 பேரையும் சூளகிரி போலீசார் கைது செய்தனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்