கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

பனகல் பூங்கா - போட் கிளப் இடையே மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணி

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் நடந்து வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 118.9 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் நடந்து வருகிறது. இதில், கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரையில் 4-வது வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. 2 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு சுரங்கப் பாதை பணிகள் நடந்து வருகிறது.

ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 4 கி.மீ. தூரம் கொண்டதாகும். இரு திசைகளிலும் தோராயமாக 16 கி.மீ. நீளத்தில் சுரங்கப் பாதையை முடிக்க 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், பனகல் பூங்கா முதல் போட் கிளப் நிலையம் வரையில் சுரங்கம் தோண்டும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியில் மயில் என்ற எந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்