தமிழக செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஆய்வு எதிரொலி - 4 பேர் இடமாற்றம்

பணிகளில் தொய்வில் காரணமாக 4 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, 4 அலுவலர்கள் பணிகளில் தொய்வுடன் பணியாற்றியது தெரியவந்தது.

இந்த நிலையில், பணிகளில் தொய்வில் காரணமாக 4 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மதுரையை சேர்ந்த வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர் மற்றும் சமையலர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு விடுதி காப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  

SCROLL FOR NEXT