தமிழக செய்திகள்

காவிரி ஆற்றில் குளிக்க தடை: அசலதீபேஸ்வரர் கோவில் தடுப்பு பகுதியில் நின்று வழிபட்ட பக்தர்கள்

மோகனூர் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் அசலதீபேஸ்வரர் கோவிலில் போலீசார் தடுப்பு பகுதியில் நின்று வழிபட்டு சென்றனர்.

தினத்தந்தி

மோகனூர்:

மோகனூர் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் அசலதீபேஸ்வரர் கோவிலில் போலீசார் தடுப்பு பகுதியில் நின்று வழிபட்டு சென்றனர்.

குளிக்க தடை

காவிரி நீர்ப்பிடிப்பு பதிதிகளில் கனமழை பெய்ததால் மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி, திருமணிமுத்தாற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் மோகனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களின் நலன்கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு தடுப்பு அமைத்து பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் நேற்று ஆடி மாத ஞாயிறையொட்டி காவிரி ஆற்றுக்கு வந்த பக்தர்கள், ஏமாற்றத்துடன் மோகனூர் அசலதீபஸ்வரர் கோவில் அருகே உள்ள போலீசார் தடுப்பு அமைத்த பகுதியில் நின்று வழிபட்டு சென்றனர்.

குலதெய்வ கோவில்

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாட்டால் சாமி கும்பிடுவது தடைபட்டது.

இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு குலதெய்வ கோவிலில் சாமி கும்பிடலாம் என நினைத்தோம். ஆனால் தற்போது காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வந்ததால் இந்தாண்டும் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. எனினும் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி தடுப்பில் நின்று சாமி கும்பிட்டு செல்கிறோம்என்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு