தமிழக செய்திகள்

மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆவின் பாலகம் திறப்பு விழா

மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆவின் பாலகம் திறப்பு விழா

தினத்தந்தி

மோகனூர்:

மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று காலை புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா நடைபெற்றது. நாமக்கல் ஆவின் பொது மேலாளர் பார்த்தசாரதி, தலைமை தாங்கினார். மோகனூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி கருமண்ணன், முன்னிலை வகித்தார். விழாவில் நாமக்கல் மாவட்ட ஆவின் தலைவர் ஆர்.ஆர்.ராஜேந்திரன் கலந்து கொண்டு புதிய ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார். இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் உடையவர், மோகனூர் ஒன்றிய செயலாளரும், அட்மா சேர்மனுமான நவலடி, பேரூர் செயலாளர் செல்லவேல், பேரூராட்சி தலைவர் வனிதா மோகன்குமார், துணை தலைவர் சரவணக்குமார், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் சுகுமார், இலக்கிய அணி புரவலர் அர்ச்சுனன் உள்பட பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு