தமிழக செய்திகள்

உணவு திருவிழாவில் வசூலான பணத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்கிய மாணவ, மாணவிகள்

உணவு திருவிழாவில் வசூலான பணத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மாணவ, மாணவிகள் வழங்கினர்.

உலக உணவு நாளை முன்னிட்டு சோழபுரம் ஸ்ரீரமணவிகாஸ் மேல்நிலை பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது. விழாவில் 100-க்கும் மேற்பட்ட இயற்கை உணவு வகைகள் ஆசிரிய, ஆசிரியைகளால் தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இயற்கை உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இவ்விழா அமைந்தது. விழாவில் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த இயற்கை உணவுகளை மாணவ, மாணவிகள் வாங்கியதின் மூலம் ரூ.10 ஆயிரம் வசூலானது. அந்த தொகையை புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கபட்டது. இந்த தொகையை தாளாளர் முத்துகண்ணன் தலைமையில் திரைப்பட நடிகர் குட்டிமணி வழங்கினார். அத்துடன் தீபாவளி புத்தாடைகளும் வழங்கப்பட்டது. 

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...