தமிழக செய்திகள்

குரங்குகள் தொல்லை

குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

வத்தலகுண்டு காந்திநகர் மெயின் ரோட்டில் கடந்த சில வாரங்களாக ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை திடீர், திடீரென சாலையின் குறுக்காக ஓடுவதால் சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்லும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் குரங்குகள் மீது மோதாமல் இருக்க வாகனங்களை அவர்கள் நிறுத்த முயலும் போது விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. இதுதவிர அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்குள் புகும் குரங்குகள் நோயாளிகள் வாங்கி வைக்கும் உணவு பொட்டலங்களையும் தூக்கிச்சென்றுவிடுகின்றன. எனவே தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடித்து அகற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு