தமிழக செய்திகள்

மாதாந்திர பராமரிப்பு பணி: திருச்செந்தூரில் நாளை மின்தடை அறிவிப்பு

தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், திருச்செந்தூர் கோட்டத்தில் உள்ள துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட பின்வரும் துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (16.5.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று திருச்செந்தூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சாத்தான்குளம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சாத்தான்குளம், முதலூா், கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்புராயபுரம், தருமபுரி, போலயாா்புரம், சுப்புராயபுரம், பொத்தகாலன்விளை, சிறப்பூா், ஆலங்கிணறு, கொம்பன்குளம், நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான்மாணிக்கம் ஆகிய பகுதிகளிலும்; நாசரேத் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை ஆகிய பகுதிகளிலும்;

செம்மறிக்குளம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை ஆகிய பகுதிகளிலும்; நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட நடுவக்குறிச்சி, தட்டாா்மடம், கொம்மடிக்கோட்டை, புத்தன்தருவை, சாலைப்புதூா், கடகுளம், இடைச்சிவிளை, பனைவிளை, மணிநகா், பூச்சிக்காடு, அதிசயபுரம், பிரகாசபுரம், தச்சன்விளை, படுக்கப்பத்து, உடைபிறப்பு, சுண்டன்கோட்டை, பெரியதாழை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் ஆகிய பகுதிகளிலும்;

பழனியப்பபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பழனியப்பபுரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட்டாரிமங்கலம், மீரான்குளம், தோ்க்கன்குளம், ஆசிா்வாதபுரம், கருங்கடல், கோமனேரி ஆகிய பகுதிகளிலும்; உடன்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உடன்குடி, தைக்காவூா், சீா்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியாா்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, சீருடையார்புரம், எள்ளுவிளை, கரிசன்விளை, குதிரைமொழி, வீரப்பநாடார் குடியிருப்பு, தேரிக்குடியிருப்பு, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூா், பிறைகுடியிருப்பு, கடாட்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.