தமிழக செய்திகள்

ஓசூர் தாலுகா அலுவலக சாலையில்போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

தினத்தந்தி

ஓசூர்

ஓசூரில் தாலுகா அலுவலக சாலை, உழவர் சந்தை சாலை மற்றும் ரெயில் நிலைய சாலை போக்குவரத்து நிறைந்த பகுதிகளாகும். நேற்று அந்த பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் 100-க்கும் மேற்பட்ட கார், வேன், ஆட்டோ, மற்றும் இருசக்கர வாகனங்கள் நெரிசலில் சிக்கி, 1 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் பணிக்கு செல்பவர்கள், அவசர வேலையாக செல்பவர்கள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் அங்கு வந்து போக்குவரத்தை சீர்படுத்தினர். இதையடுத்து, அந்த பகுதியில் இயல்பு நிலை திரும்பியது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து