தமிழக செய்திகள்

பழைய மாமல்லபுரம் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

பழைய மாமல்லபுரம் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

தினத்தந்தி

பழைய மாமல்லபுரம் சாலை சிறுசேரியில் இருந்து கந்தன் சாவடி வரை 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையின் நடுவில் இரும்புத்தகடுகள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் பழைய மாமல்லபுரம் சாலை நாவலூர் உள்ளிட்ட சில பகுதிகளில் மாடுகள் மாலை நேரங்களில் சாலைகளில் வலம் வருவதும், சாலையில் படுத்துக்கிடப்பதையும் காணமுடிகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் சிரமத்துடனும், அச்சத்துடன் செல்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து