சென்னை,
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் போடப்பட்டு 136 ஆண்டுகள் ஆகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தற்போது நடைபெறும் சம்பவங்கள் ஏற்புடையதாக இல்லை. பேபி அணை, முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தும் தமிழ்நாட்டு அரசின் முயற்சிக்கு கேரள அரசு ஏராளமான தடைகளை விதித்து வருகிறது.
கேரள அரசின் நட்பை பயன்படுத்தி, முல்லை பெரியாறு அணையின் முழு கொள்ளளவை அதிகரிக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். 5 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியார் அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.