தமிழக செய்திகள்

செக் மோசடி வழக்கில் நகராட்சி ஊழியருக்கு 6 மாதம் சிறை

செக் மோசடி வழக்கில் நகராட்சி ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் பகுருதீன். இவர் முன்சீப் கோர்ட்டு தெருவில் செருப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் பணிபுரியும் சக்திவேல் என்பவர் கடந்த 1.2.2013 அன்று ரூ.75 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இந்த பணத்தை திருப்பி கொடுப்பதற்காக கடந்த 6.3.2013 அன்று திருத்துறைப்பூண்டியில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் காசோலையை சக்திவேல் கொடுத்தார். ஆனால் அந்த காசோலையில் பணம் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி விரைவு கோர்ட்டில் பகுருதீன் வழக்கு தொடர்ந்தார். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி அருண், சக்திவேலுக்கு 6 மாத சிறை தண்டனையும், நஷ்ட ஈடாக பகுருதீனுக்கு ரூ.75 ஆயிரமும் 2 மாதத்தில் வழங்க வேண்டும். தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பளித்தார்.  

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு