தமிழக செய்திகள்

மண் கொள்ளை தொடர்பாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் - ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு

ஏரி மண் கொள்ளை தொடர்பாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினத்தந்தி

விழுப்புரம்,

செஞ்சி அருகே ஏரி மண் கொள்ளை தொடர்பாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது தாக்குதல் நடத்திய மீனம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மீனம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் முன்வர்அலி ஏரி மண் கொள்ளையில் ஈடுபடுவதாக அக்கிராம பொதுமக்கள் பெயரில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இதனால் ஆத்திரமடைந்த முன்வர்அலி மகன் லியாகத் அலி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் போஸ்டர் ஒட்டிய தரப்பினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக போஸ்டர் ஒட்டிய தரப்பினர் அளித்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் முன்வர்அலி அவரது மகன் லியாகத்அலி மற்றும் மேலும் ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் முன்வர்அலி அளித்த புகாரின் பேரில் போஸ்டர் ஒட்டிய தரப்பை சார்ந்த ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்