தமிழக செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

தினத்தந்தி

கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் ஆடி பெருந்திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடந்தது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பெண்கள் மேள தாளங்கள் முழங்க பூ தட்டுகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கொண்டு வந்த பூக்களை அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். இதேபோல வாகன உரிமையாளர்கள், வாகனங்களிலும் பூ தட்டுகள் கொண்டு வந்தனர். டன் கணக்கில் பூக்கள் கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வருகிற 23-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்குகிறது. 30-ந் தேதி பொங்கல் விழாவும், 31-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு