சென்னை,
ராஜபாளையம் பாஜக பொதுக்கூட்டத்தல் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:
22 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ள மோடி ஆட்சியை அகற்ற முடியாது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை அரங்கேற்றாமல் எனது உயிர் போகாது. தமிழ்நாட்டு எல்லையை தாண்டினால் திமுகவுக்கு முகவரி கிடையாது.சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் செயல்படுகிறார். இந்தியாவின் முக்கால்வாசி பகுதியில் காவி பரவி விட்டது, தமிழகத்தில் கண்டிப்பாக காவி மலரும்.
இவ்வாறு அவர் கூறினார்.