தமிழக செய்திகள்

பெண்கள் சிறையில் இருக்கும் நளினி ‘வீடியோகால்’ மூலம் தாயாருடன் பேசினார்

பெண்கள் சிறையில் இருக்கும் நளினி ‘வீடியோகால்’ மூலம் தனது தாயாருடன் பேசி உள்ளார்.

தினத்தந்தி

வேலூர்,

முன்னாள் பிரதமர் கொலை வழக்கு கைதி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சக கைதி ஒருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நளினி சிறையில் தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையாக வாட்ஸ்அப் வீடியோ காலில் நளினி தனது தாயார் பத்மாவுடன் 5 நிமிடம் பேசினார். நளினியை சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்றுவது தொடர்பாக அவரது தாயார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்