தமிழக செய்திகள்

நாமக்கல்: வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து ஹோலி கொண்டாடிய போலீசார்

வடமாநில தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கியும் வண்ணப்பொடிகளை பூசியும் போலீசார் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

தினத்தந்தி

நாமக்கல்,

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், வடமாநில தொழிலாளர்கள் சிலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லத் துவங்கினர். இதனிடையே பீகார் மாநில அதிகாரிகள் குழு, தமிழகத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்ததில், வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களிடையே பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்குச் சென்ற போலீசார், இனிப்பு வழங்கியும் வண்ணப்பொடிகளை பூசியும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு