தமிழக செய்திகள்

கூடலூர் அருகேகார் மோதி தொழிலாளி படுகாயம்

கூடலூர் அருகே கார் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொச்சு புரைக்கல் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் பொன்னன். இவர் தனது காரில் குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார் கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் பசுமை நகர் அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் வந்த கூடலூர் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளியான கருப்பையா என்பவர் படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து