தமிழக செய்திகள்

தேவதானப்பட்டி அருகேமின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

தேவதானப்பட்டி அருக மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானார்.

தினத்தந்தி

தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளபுரத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 23). எலக்ட்ரீசியன். நேற்று இவர், அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கீழ கிடந்த வயரை எதிர்பாராதவிதமாக மோகன் மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை