தமிழக செய்திகள்

ஈரோடு அருகே பா.ஜ.க. அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

ஈரோடு அருகே பா.ஜ.க. அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சோலார்

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்ததை கண்டித்து ஈரோடு 46 புதூர் அருகே பச்சைபாளி ரோடு பகுதியில் இருக்கும் ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் வந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜ.க. அலுவலகத்துக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுழற்சி முறையில் காலை மற்றும் இரவு நேரங்களில் பா.ஜ.க. அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கட்சி அலுவலகத்துக்கு வரும் நிர்வாகிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்