தமிழக செய்திகள்

பேராவூரணி அருகே: மூதாட்டியை உயிரோடு ஆற்றுக்குள் வீசிச் சென்ற கொடூரம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மூதாட்டியை உயிரோடு ஆற்றுக்குள் வீசிச் சென்ற சம்பவம் மனிதநேயத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.

தினத்தந்தி

தஞ்சாவூர்

பேராவூரணியில் கண்பார்வை குறைபாடு உடையை அந்த மூதாட்டி பேருந்து மற்றும் ரெ ல் நிலையங்களில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். 2 நாட்களாக ரெயில் நிலையம் எதிரேவுள்ள மரத்தடியில் பசி, பட்டினியோடு படுத்துக் கிடந்த மூதாட்டியை, சிலர் தூக்கிச் சென்று ஆனந்தவல்லி வாய்க்காலுக்குள் ஆடையில்லாமல் போட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

புதர் மண்டிய வாய்க்காலுக்குள் கிடந்த மூதாட்டியை பார்த்த பொதுமக்கள், சடலம் கிடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பார்த்த போது மூதாட்டிக்கு உயிர் இருந்தது தெரியவந்தது. பின்னர், மூதாட்டியை மீட்டு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு