தமிழக செய்திகள்

சீர்காழி அருகே எஸ்.ஐ. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியதில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் படுகாயமடைந்தார்.

தினத்தந்தி

சீர்காழி,

சீர்காழி அருகே திருவெண்காட்டில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் (58 வயது) என்பவர் வீட்டில் மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணேசன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்மநபர் அவர் மீது அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசினார்.

இதில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் படுகாயமடைந்தார். கைகள் மற்றும் கால்களில் தீக்காயம் அடைந்த நிலையில் கணேசன், சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து