தமிழக செய்திகள்

உத்தமபாளையம் அருகேதொழிலாளியை அரிவாளால் வெட்டிய மனைவி

உத்தமபாளையம் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 36). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி. நேற்று முன்தினம் ஈஸ்வரனின் பெற்றோர் அவரது வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர் ஈஸ்வரியிடம் உணவு தயாரிக்குமாறு கூறினார்.

ஆனால் அவர் உணவு தயார் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரி அரிவாளால் ஈஸ்வரனை வெட்டினார். பின்னர் படுகாயம் அடைந்த ஈஸ்வரன் சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து