பேட்டை:
நெல்லை மேலப்பாளையத்தில் தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்ப்பூசணி பழத்துண்டுகளை வழங்கினார்.
முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.