தமிழக செய்திகள்

நெல்லை: உவரியில் விசா இல்லாமல் தங்கியிருந்த அமெரிக்கர் கைது...!

உவரி அந்தோணியார் ஆலயத்தில் விசா இல்லாமல் சுற்றித்திரிந்த அமெரிக்காவை சேர்ந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

நெல்லை,

அமெரிக்காவின் வாசிங்டன் பகுதியை சேர்ந்தவர் வெரிட் என்ற ஸ்பெக்ட்(வயது 60). இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்து உள்ளார்.

அவரது விசா காலம் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. விசா முடிந்து ஒரு வருடத்திற்குமேல் ஆன நிலையிலும் அமெரிக்கா செல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் உவரி அந்தோணியார் ஆலய பகுதியில் நேற்று இரவு சுற்றிதிரிந்த அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் விசா முடிவடைந்த நேரம் கொரோனா காலம் என்பதால் நாட்டுக்கு அவரால் திரும்பி செல்ல முடியவில்லை. தற்போது மீண்டும் விசா பெற்று அமெரிக்கா செல்ல முயற்சி செய்து வருவது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

மேலும், அவர் கூறிய காரணம் உண்மைதானா என்று போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு