தமிழக செய்திகள்

நெல்லை-திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் நாளை ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

நெல்லை பகுதிகளில் நாளை ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை ரெயில்வே யார்டு பகுதியில் நடைபெறும் பாலம் பராமரிப்பு பணி காரணமாக நாளை ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை-திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்(வண்டி எண்-06675) நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் திருச்செந்தூர்-வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லா சிறப்பு ரெயிலும் நாளை முழுமையாக ரத்து செய்யப்ப்படுகிறது. நாகர்கோவில்-தாம்பரம் இடையிலான அந்தியோதயா சிறப்பு ரெயில் நாளை விருதுநகரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாலக்காடு-திருச்செந்தூர் விரைவு ரெயில் நாளை பாலக்காட்டில் இருந்து கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும் என்றும், திருச்செந்தூர்-பாலக்காடு விரைவு ரெயில் நாளை திருச்செந்தூருக்கு பதில் கோவில்பட்டியில் இருந்து புறப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை