தமிழக செய்திகள்

நெல்லை: மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை...!

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.

தினத்தந்தி

அம்பை,

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் விழுவது வழக்கம்.தற்போது வனத்துறையினர் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பெய்த திடீர் மழையினால் அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிட எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்த தடையால் அருவியில் குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்