தமிழக செய்திகள்

வெளிநாட்டில் வசிப்போர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் வகையில் புதிய வசதி - மின்வாரியம் ஏற்பாடு

வெளிநாட்டில் வசிப்போருக்காக ஆதார் எண்ணை இணைக்கும் இணையதள பக்கத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் மூலமாகவும், இணையதளம் வாயிலாகவும் மின் இணைப்பை ஆதாருடன் இணைக்கலாம் என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டின் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் எவ்வாறு இணைப்பது என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆதார் எண்ணை இணைக்கும் இணையதள பக்கத்தில் 4-வது ஆப்ஷனாக என்.ஆர்.ஐ. பதிவிற்கான புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டில் வசிப்பவர்களும் தங்கள் வீட்டின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்