தமிழக செய்திகள்

புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா

புதிய பயணிகள் நிழற்குடையை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

தினத்தந்தி

திருப்புவனம் யூனியனை சேர்ந்த மேலவெள்ளுர் கிராமத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து பயணியர் நிழற்குடை அமைக்க ரூ.4.50 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அந்த பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் தேவதாஸ் வரவேற்றார். புதிய பயணிகள் நிழற்குடையை தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும், கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் நகர் செயலாளர் நாகூர்கனி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஈஸ்வரன், சுப்பையா, ராமு, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் சேகர், பேரூராட்சி துணை தலைவர் ரகமத்துல்லாகான், ஒன்றிய நிர்வாகிகள் மடப்புரம் மகேந்திரன், இளங்கோவன், சக்திமுருகன், கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கோபால் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?