தமிழக செய்திகள்

புதிய காவல் ஆணையம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தர

தினத்தந்தி

சென்னை,

ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆணையத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அலாவுதீன் மற்றும் ராதாகிருஷ்ணன், மருத்துவர் ராமசுப்பிரமணியம், பேராசிரியர் நளினிராவ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆணையர் உறுப்பினர் செயலராக காவல்துறை கூடுதல் இயக்குனர் மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். காவலர்கள் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதற்கான புதிய பயிற்சி முயற்சிகளை இந்த புதிய காவல் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் இந்த ஆணையம் பரிந்துரை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்