தமிழக செய்திகள்

ரூ.16.60 லட்சத்தில் புதிய கழிவுநீர் கால்வாய்

திருப்புவனத்தில்ரூ.16.60 லட்சத்தில் புதிய கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.

திருப்புவனம்

திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் 7-வது வார்டில் உள்ள பர்மா காலனி 2-வது வீதியிலும், 14-வது வார்டில் உள்ள இந்திரா நகர் காலனி பகுதியிலும், 18-வது வார்டு மாதவன் நகர் ஆகிய பகுதிகளிலும் 15-வது நிதிக்குழு நிதியில் இருந்து ரூ.16.60 லட்சத்தில் கழிவு நீர் கால்வாய்கள் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.

பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் துணை தலைவர் ரகமத்துல்லாகான், பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், பத்மாவதி முத்துக்குமார், மாரிதாசன், கமிதாபானு ஷேக்முகம்மது, ராமலட்சுமி பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT