தமிழக செய்திகள்

புதிய டிரான்ஸ்பார்மர் தொடக்க விழா

புதிய டிரான்ஸ்பார்மர் தொடக்க விழா நடந்தது. ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

ராணிப்பேட்டை,

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு எசையனூர் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர். மேலும் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.

அதன் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு செயற்பொறியாளர் சந்திரன் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, உதவி செயற் பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் கணேசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் எம்.எல்.ஏ., ஏ.எம். முனிரத்தினம் கலந்து கொண்டு புதிய டிரான்ஸ்பார்மரை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து