தமிழக செய்திகள்

நீலகிரி: மரத்தில் இருந்து பலாப்பழங்களை பறித்து சுவைக்கும் காட்டு யானை

கோத்தகிரி அருகே மரத்தில் காய்த்திருந்த பலாப்பழங்களை காட்டு யானை பறித்து சுவைத்தது.

தினத்தந்தி

கோத்தகிரி ,

கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பலா மரங்களில் தற்போது சீசன் காரணமாக பலாப் பழங்கள் காய்த்து குலுங்கி வருகின்றன. இவற்றை உண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து ஆண்டு தோறும் காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்து முகாமிட்டு சீசன் முடிந்தவுடன் திரும்பிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முள்ளூர் கிராமப் பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று அங்குள்ள பலா மரத்தில் காய்த்திருந்த பழங்களை தனது காலை உயர்த்தி பறிக்க முயற்சி செய்தது. பழங்களை பறிக்க முடியாததால் தனது தோள்களால் மரத்தை இடித்து குலுக்கி பழங்களை கீழே விழச் செய்து சுவைத்து விட்டு சென்றது. இந்த காட்சியை அங்கிருந்த அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்