தமிழக செய்திகள்

கடலூர் வளையமாதேவியில் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகம்

வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி. நிர்வாகத்தினர் நிலங்களை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

கடலூர்,

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி. நிர்வாகம் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணிகளை தொடங்கியுள்ளது. அதன்படி இன்று வளையமாதேவி பகுதியில் நிலங்களை சமன் செய்யும் பணி நடைபெற்றது.

அப்போது அங்குள்ள கிராம மக்கள், நிலங்களை கையகப்படுத்தியதற்கு இன்னும் முழுமையான இழப்பீடு வந்து சேரவில்லை என்று கூறி, பணிகளை தொடர எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் என்.எல்.சி. அதிகாரிகள் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கிராம மக்கள் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், என்.எல்.சி. நிர்வாகத்தினர் விரிவாக்கப் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டுச் சென்றனர். தொடர்ந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படும் என என்.எல்.சி. நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு